Friday, 20 January 2017

இளங்காளைகளின் சீற்றம்!

ஓ கடலே !

எங்கள் சீற்றத்தை கண்டு அஞ்சாதே
இது உயிர் பலி வாங்கிடாத சுனாமி !!!

சாது மிரண்டால் காடு கொள்ளாது - இது பழமொழி!!!
சாது மிரண்டால் கடலும் கொள்ளாது - இது புதுமொழி!!!

சீறி பாயும் காளைகள் கண்டு,
சினம் கொண்ட சிங்கங்கள் ஓடுவது உண்டு !!!

இளங்காளைகள் நாங்கள் சீறிட,
எமனும் வந்து நிற்பான் தோற்றிட !!!




1 comment:

  1. குறைந்த வரிகள் தான், இருப்பினும்
    சிறுத்த கடுகில், குறையாத காரம் போல
    வரிகளில் உணர்சிகளும், கர்வமும் அதிகமாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete