மிருக மனமொன்றுடன் வந்தாய்
மிருகத்தனம் அதன் இயல்பு என்றாய்
பார்வையின் பிழைகளை, பருவத்தின் சிக்கல்கள் என்றாய்
போர்த்தி வைத்த பதுமையை, உடைத்து எரிந்து
மூடி வைத்ததன் விளைவு என்று விவாதமும் செய்தாய்
புதுமை பெண்கள் பலர் பிறந்ததை கண்டு
சினம் கொண்ட நீயோ அதை சிதைக்கவும் செய்தாய்
வேட்டையாட பிறந்த உயிரினை சீண்டும் வகையில்
திறந்து வைத்ததும் உன் தவறே என்று கூறி
சிதைத்ததன் காரணம் சரியென வாதிட்டாய்
பழமையும் கைவிட, புதுமையும் தோற்று விட,
எதை தொடர என்று குழம்பி தவிக்கும் பெண்டீர் மனதினை
புரியா புதிர் என்று ஒதுக்கி தள்ளி விட்டாய்
சமுதாய கட்டமைப்பை, சமாதான கட்டமைப்பாக மாற்றியதும் நீயே!
எல்லாமும் உன் பிழையாய் இருக்க,
பேதை பெண்டிர்க்கு சுதந்திரம் தர, அவள் உன் குடும்பத்தில் ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மட்டும் எவ்விதத்தில் நியாயம்?
மிருகத்தனம் அதன் இயல்பு என்றாய்
பார்வையின் பிழைகளை, பருவத்தின் சிக்கல்கள் என்றாய்
போர்த்தி வைத்த பதுமையை, உடைத்து எரிந்து
மூடி வைத்ததன் விளைவு என்று விவாதமும் செய்தாய்
புதுமை பெண்கள் பலர் பிறந்ததை கண்டு
சினம் கொண்ட நீயோ அதை சிதைக்கவும் செய்தாய்
வேட்டையாட பிறந்த உயிரினை சீண்டும் வகையில்
திறந்து வைத்ததும் உன் தவறே என்று கூறி
சிதைத்ததன் காரணம் சரியென வாதிட்டாய்
பழமையும் கைவிட, புதுமையும் தோற்று விட,
எதை தொடர என்று குழம்பி தவிக்கும் பெண்டீர் மனதினை
புரியா புதிர் என்று ஒதுக்கி தள்ளி விட்டாய்
சமுதாய கட்டமைப்பை, சமாதான கட்டமைப்பாக மாற்றியதும் நீயே!
எல்லாமும் உன் பிழையாய் இருக்க,
பேதை பெண்டிர்க்கு சுதந்திரம் தர, அவள் உன் குடும்பத்தில் ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மட்டும் எவ்விதத்தில் நியாயம்?